சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது? கனவு பலிக்குமா?

ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி கனவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின் மாறுபாட்டால் விளைவது கனவு என்று ஆயுர்வேதம் விவரிக்கும். கனவுகள் குறித்து தேவகுருவான பிரகஸ்பதி பகவானும் விளக்கியுள்ளதாக ஞானநூல்கள் விவரிக்கின்றன. ப்ரச்ன மார்க்கமும் கனவுகள் பற்றி குறிப்பிடுகிறது. நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத கனவு கள் தோன்றுவதே உண்மையான கனவுகள் ஆகும். அப்படிப்பட்ட கனவுகளுக்கு உரிய பலன்களைத் தான் சொப்பன சாஸ்திரம் சொல்கிறது. கனவுகள் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். இரவு உறங்கும் போது எந்த நேரத்திலும் வரலாம். அதாவது படுத்துறங்கிய சில மணிகளிலோ, நள்ளிரவிலோ, விடியல் நேரத்திலோ வரக்கூடும். இப்படி நாம் காணும் கனவுகள் பலிக்கும் காலம் பற்றியும் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும்; இரண்டாவது … Continue reading சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது? கனவு பலிக்குமா?

Rate this:

ஊட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தாத அறநிலையத்துறை

ஊட்டி: ஆகம விதிகளை முறையாக கடைபிடிக்காத இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால், ஊட்டி மாரியம்மன் கோவில், மகா கும்பாபிஷேகம் நடத்தாமல் இருப்பது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி மாரியம்மன் கோவில், சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கோவில் ஆகும்.  சந்தைக்கடை மாரியம்மன் கோவில், என அழைக்கப்படும் முப்பெரும் தேவியர்: இக்கோவிலில், இச்சா,  கிரியா, ஞானம் ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி என முப்பெருந்தேவிகளாக வீற்றுள்ளனர். இதில், ஒரே பீடத்தில் காளி, மாரி வீற்றிருப்பதும், காளி உக்கிரமாக இல்லாமல் சாந்தமாக வீற்றிருப்பதும் அதிசயமாக கருதப்படுகிறது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சித்திரை தேர்த்திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், உள்ளூர் உபயதாரர்கள், ஆன்மிக அமைப்பினரும் பங்கேற்பது சிறப்பு பெற்றதாகும். முக்கிய திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேர் மீது உப்பு வீசி, நேர்த்தி கடன் செலுத்தி … Continue reading ஊட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தாத அறநிலையத்துறை

Rate this:

விவசாய நிலத்தில் ரிசார்ட் : ஆதிவாசி மக்கள் புகார்

ஊட்டி 14: அதிகரட்டி கொல்லிமலையில், ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட ‘ரிசார்ட்’ பணிகள், விதிமுறைகளை மீறி மீண்டும் துவங்கியுள்ளதற்கு, கோத்தர் இன ஆதிவாசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், ஆதிவாசிகளின் இடங்களை குறைந்த விலைக்கு விவசாயம் செய்வதாக பணம் படைத்தவர்கள் வாங்கி, காட்டேஜ்கள், ரிசார்ட்கள், பங்களாக்கள் கட்டி வருகின்றனர். இதற்கு பல உள்ளாட்சி அமைப்புகளும் உறுதுணையாக செயல்படுகின்றன. இந்த வரிசையில், அதிகரட்டி பேரூராட்சியில், கொல்லிமலை கிராமத்தில், 2011ல் தடை விதிக்கப்பட்ட  இடத்தில் மீண்டும் ‘ரிசார்ட்’ கட்டுவதற்கு கோத்தர் இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மாவட்ட கலெக்டருக்கு 14ம்தேதி மனு கொடுக்க, பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஊட்டிக்கு வருகை தந்தனர். தேர்தல் என்பதால், மனுவை அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, ஊர் நாட்டாமை முருக கம்பட்டன், ஊர் தலைவர் சுபாஷ் கொய்தன், நீலகிரி மாவட்ட கோத்தர் இன ஆதிவாசிகள் சங்க செயலாளர் முருகன் ஆகியோர் கூறியதாவது: அப்பாவி மக்களிடம் ஆசை … Continue reading விவசாய நிலத்தில் ரிசார்ட் : ஆதிவாசி மக்கள் புகார்

Rate this:

தென்னிந்தியாவை புறக்கணிக்கும் கல்கத்தா தேயிலை வாரிய அதிகாரிகள்

ஆய்வு செய்யாமலேயே தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கியதால் அப்செட் குன்னூர்: குன்னூரில் கல்கத்தாவில் இருந்து வந்த , 39 தேயிலை தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் எஸ்டேட் மற்றும் சிறு தேயிலை தொழிற்சாலைகள் என மொத்தம், 325 தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகள் தேயிலை வாரியத்தின் மூலமாக லைசன்ஸ் பெற்று இயக்க வேண்டும். இந்நிலையில், சில தொழிற்சாலைகளை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ள நிலையில், பெயர் மாற்றம் செய்து லைசன்ஸ் பெற வேண்டும். அதேபோல புதிதாக, 3 தொழிற்சாலைகள் லைசன்ஸ்க்கு விண்ணப்பித்துள்ளன. இதுபோன்று கடந்த, 2000ம் ஆண்டில் இருந்து பல தொழிற்சாலைகளும் லைசன்ஸ் கோரி தேயிலை வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். லைசன்ஸ்க்கு விண்ணப்பித்து, 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் அல்லது கொடுக்க முடியாது என்பதற்கான காரணத்தை தெரிவித்து ரத்து செய்ய வேண்டும். ஆனால், கல்கத்தாவில் உள்ள தேயிலை வாரியம் முறையாக செவிசாய்க்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதனால், நிலுவையில் … Continue reading தென்னிந்தியாவை புறக்கணிக்கும் கல்கத்தா தேயிலை வாரிய அதிகாரிகள்

Rate this:

பெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்!

Originally posted on ஆறுமுகம் அய்யாசாமி:
அனுமார் வால் போல் நாளும் நீளும் பெருமாள் முருகன் விவகாரம், நமக்கு, தமிழ் திரைப்படங்களின் காமெடிக் காட்சிகளை நினைவூட்டுகிறது. அவற்றில் முக்கியமானது, ‘கிணற்றைக் காணோம்’ என்று புகார் தரும் வடிவேலுக்குப் பயந்து, போலீஸ் சீருடையை கழற்றிக் கொடுத்து விட்டு, ‘வேலையே வேண்டாம்’ என்றோடும் போலீஸ் அதிகாரியின் கேரக்டர். குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்ட மொக்கச்சாமியின், பூட்டிய வீட்டுக்கு முன் கூடி நின்று, ‘வெளியே வாடா’ என்று கூவல் போடும் கஞ்சா கருப்பு குழுவினரின் காமெடி, எழுத்தாளருக்கு மிரட்டல் விடும் சில்லுண்டிகளின் வீரத்துக்கு நிகரானது. ‘தமிழ் வாத்தியார், கோவில் குருக்கள் மாதிரி, தயிர் சாதம் திங்குறவங்கள அடிச்சே ரவுடியா டெவலப் ஆகியிருக்கோம்’ என்றொரு விஷால் படத்து டயலாக்கும் சேர்ந்து நினைவுக்கு வருகிறது. அட, தமிழாசிரியர் என்பதுகூட, சூழ்நிலைக்கு கச்சிதமாய் பொருந்துகிறதே! படையெடுத்து வந்த வல்லவராயன், காலில் விழுந்து சரணாகதி அடைந்த புலிகேசியைப் பார்த்து, ‘சே என்னய்யா, இப்படி ஒரேயடியாகக்… Continue reading பெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்!

Rate this:

குன்னூரில் அபூர்வ காளான்

குன்னூர் ஹைபீல்டு பகுதியில் வளர்ந்துள்ள அபூர்வ காளான் சுற்றுலா பயணிகளை ஆச்சர்யமடைய செய்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகைகள், காளான் வகைகள் உள்ளன. சிம்ஸ்பூங்கா பகுதியில் கடந்த மாதம் வளர்ந்த காளானை கோவை வேளாண் பல்கலைகழக மாணவர்கள் ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில், குன்னூர் டைகர்ஹில் பகுதியில் அபூர்வ வகையிலான காளான் வளர்ந்துள்ளன. ஹைபீல்டு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட்டு ஆச்சர்யமடைந்து செல்கின்றனர். இது குறித்து இப்பகுதியை சேர்ந்த சேகர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு நிழல் சூழ்ந்த, செடிகளுக்கு இடையே வளர்ந்துள்ள இந்த காளான் அபூர்வமாக உள்ளது. இதனை பார்த்த வடமாநில சுற்றுலா பயணி ஒருவர், இந்த வகை காளான் இமயமலை பகுதியில் தான் இருக்கும். இவை அபூர்வ வகையை சேர்ந்தது. இதனை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது என தெரிவித்து சென்றார். தற்போது இதன் அருகிலும் இந்த காளான் … Continue reading குன்னூரில் அபூர்வ காளான்

Rate this:

அரசர்களின் அசுவமேத யாகம் நீலகிரியில்…. கோலாகலமாக துவங்கியது அதிருத்ர மகா யக்ஞம்

குன்னூர் அருகே சித்தகிரியில் உள்ள ஷீரடி பாபா கோவிலில் அதிருத்ர மகா யக்ஞம் துவங்கியது. குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் சித்தகிரியில், உலகிலேயே மிக உயர்ந்த 7.6 அடி உயரமுள்ள ஷீரடி பாபா கோவிலில் திருவுருவ சிலை கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தட்சிண பாரத பகவான் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை தலைவி சக்திமயி மாதா, தலைமையில் 500 கிராமங்களுக்கு ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு அதிருத்ர மகா யக்ஞத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. கோவிலின் ஓராண்டு நிறைவையொட்டியும், பிரபஞ்ச வாழ்வாதாரங்களுக்காகவும், உலக நன்மைக்காகவும், இங்கு அதிருத்ர மகா யக்ஞம் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி துவங்கியது. 9 நாட்கள் தினமும் காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் இந்த யாகம் நடத்தப்படுகிறது. இதில், 64 சடங்குகள் மேற்கொள்ள, கர்நாடக மாநிலம் … Continue reading அரசர்களின் அசுவமேத யாகம் நீலகிரியில்…. கோலாகலமாக துவங்கியது அதிருத்ர மகா யக்ஞம்

Rate this:

அருவங்காடு தொழிற்சாலை மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்

3/4/2014குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுமட்டுமின்றி இங்கு ஒப்பந்த தொழிலாளர்களும் பணியில் உள்ளனர். இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை இதன் அருகிலேயே உள்ளது.இங்கு ஏற்படும் வெடி விபத்துகளுக்கும் இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இங்கு அடிப்படை தேவையான வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டை தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர். நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது 8 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில், ஒரே ஒரு ‘ஸ்ட்ரக்சர்’ மட்டுமே இவர்களை எடுத்து சென்றுள்ளனர். மேலும், 7 டாக்டர்கள் தேவைப்படும் நிலையில், ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளதாகவும், ஒப்பந்த அடிப்படையில் 3 டாக்டர்கள் பணியாற்றுன்றனர். இதனால், அவசர சிகிச்சைக்கு கூட அருகில் உள்ள வெலிங்டன் மருத்துவமனை, ஊட்டி, கோவைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஊழியர் … Continue reading அருவங்காடு தொழிற்சாலை மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்

Rate this:

ஹாக்கி சிறப்பு பயிற்சி முகாம்

3/4/2014குன்னூரில் மாணவ, மாணவியருக்கான ஹாக்கி சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீலகிரி மாவட்ட பிரிவு, நீலகிரி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் கடந்த ஏப்ரல் 28ம் தேதியில் இருந்து கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாமை குன்னூர், அருவங்காடு, உபதலை, ஜெகதளா பகுதிகளில் நடத்தி வந்தது. இதில், 16 வயதிற்குட்பட்ட 110 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.இதன் நிறைவு விழா குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் தேவாரம் தலைமை வகிதது பேசுகையில், ‘நீலகிரியில் ஹாக்கி விளையாட்டை மேம்படுத்த செயற்கை இலை மைதானம் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும்.’ என்றார். தமிழ்நாடு ஹாக்கி சங்க துணை தலைவர் ஜெபரத்தினம், நீலகிரி மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் ரவிகுமார், செயலாளர் ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். Continue reading ஹாக்கி சிறப்பு பயிற்சி முகாம்

Rate this: